/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாதித்த பாரத்வித்யா பவன் பள்ளி
/
சாதித்த பாரத்வித்யா பவன் பள்ளி
ADDED : டிச 06, 2025 09:45 AM

பழநி: மாநில அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டியில் பழநி பாரத் வித்யா பவன் பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை புரிந்தனர்.
மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட இறகுப்பந்து போட்டி திருச்சி மாவட்டம் கொங்குநாடு பொறியியல் கல்லுாரியில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சக்திஸ்ரீதேவி, தன்யஸ்ரீ ஆகியோர் 17 வயது உட்பட்ட இறகு பந்து போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை பெற்றனர். மாணவிகளை பள்ளி செயலர் குப்புசாமி, முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார், உடற்கல்வி இயக்குனர் மோகன்ராஜ், ஆசிரியர்கள் சுரேந்திரன், காளீஸ்வரி, காயத்ரி, பாராட்டினர்.

