sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ஆணிகளால் மரங்களை அழிக்கும் விளம்பர பலகைகள்

/

 ஆணிகளால் மரங்களை அழிக்கும் விளம்பர பலகைகள்

 ஆணிகளால் மரங்களை அழிக்கும் விளம்பர பலகைகள்

 ஆணிகளால் மரங்களை அழிக்கும் விளம்பர பலகைகள்


ADDED : ஜன 23, 2026 06:05 AM

Google News

ADDED : ஜன 23, 2026 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விளம்பர பலகைகளால் விபரீதம்

திண்டுக்கல் நந்தவனம் ரோட்டில் மின்கம்பத்தில் ஆபத்து என்று தெரிந்தும் மின்கம்பம் முழுவதும் விளம்பர பலகைகளை அமைத்துள்ளனர். இதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மின் துறை கண்டும் காணாமல் உள்ளது. அஜய், திண்டுக்கல்..........------- ஆணி அடிப்பதால் பாதிப்பு

வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் மரங்களில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகளை தொங்க விடுகின்றனர் .மரத்தில் ஆங்காங்கே ஆணிகள் அடிப்பதால் மரம் பட்டு போக வாய்ப்புள்ளது. இதை தடுக்க வேண்டும்.முருகன், வடமதுரை...............-------சாக்கடை அடைப்பால் கழிவுநீர்

பழநி அடிவாரம் மதனபுரம் தேவஸ்தான பள்ளியின் முன்புறம் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. பள்ளி மாணவர்கள் சென்று வரும் பாதை என்பதால் இதை உடனே சரி செய்ய வேண்டும். ஜின்னா, மானுார்.

...........--------

ரோடு பள்ளங்களால் விபத்து

வடமதுரை காணப்பாடி ரோட்டில் தபால் நிலைய பிரிவு அருகில் ரோடு சேதம் அடைந்து ஆங்காங்கு பள்ளங்கள் உருவாகி உள்ளது.இது போக்குவரத்துக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது . --- கந்தசாமி, சித்துார்.

.......-------- சாய்ந்துள்ள மின்கம்பங்கள்

எரியோடு திண்டுக்கல் ரோட்டில் தொட்டனம்பட்டியில் இருந்து நல்லமனார் கோட்டை செல்லும் ரோட்டில் மின்கம்பங்கள் மிக மோசமாக சாய்ந்துள்ளது. கீழே விழுவதற்கு முன் மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்.பழனிச்சாமி, திண்டுக்கல்.

............--------

ஆமை வேக பணியால் பாதிப்பு

ஒட்டன்சத்திரம் -திண்டுக்கல் ரோடு புதுச்சத்திரம் பகுதியில் மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .இதை கருதி பணியை விரைந்து முடிக்க வேண்டும். ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.

..........--------

அள்ளப்படாத குப்பை

திண்டுக்கல் உழவர் சந்தை எதிர்ப்புறம் முருகன் கோயில் அருகில் 2 மாதமாக குப்பை அள்ளப்படாமல் குவிந்துள்ளது . தினமும் தீவைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதை அகற்ற வேண்டும். கண்மணி, மகாலட்சுமி நகர் .

.............----------






      Dinamalar
      Follow us