sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பா.ஜ., தொழில் வல்லுனர் பிரிவு கூட்டம்

/

 பா.ஜ., தொழில் வல்லுனர் பிரிவு கூட்டம்

 பா.ஜ., தொழில் வல்லுனர் பிரிவு கூட்டம்

 பா.ஜ., தொழில் வல்லுனர் பிரிவு கூட்டம்


ADDED : நவ 14, 2025 04:52 AM

Google News

ADDED : நவ 14, 2025 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., கட்சி அலுவலகத்தில் தொழில் வல்லுனர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சுந்தர்ராமன் கலந்துகொண்டார்.

அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி. மறுசீராய்வு குறித்து கையேடு வெளியிடப்பட்டது. 4 பிரிவுகளாக இருந்ததை மக்களின் நலன் கருதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 பிரிவுகளாக மறுசீராய்வு செய்து வெளியிட்டார். இதன் மூலம் நாடு முழுவதும் பெரிய நிறுவனங்களில் விற்பனை அதிக அளவில் நடக்கிறது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. ஜி.எஸ்.டி. மறுசீராய்வு காரணமாக விரைவில் 3-ம் இடத்தை பெற்றுவிடும்.அதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பா.ஜ., தொழில் வல்லுனர் பிரிவுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி ஜி.எஸ்.டி. மறுசீராய்வு குறித்து விளக்கம் அளித்து வருகிறோம். ஜி.எஸ்.டி. மறுசீராய்வுக்கு பிறகும் விற்பனை விலையை குறைக்காத நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என்றார்.

பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், தொழில் வல்லுனர்கள் பிரிவு மாநில செயலாளர்கள் உமா நாச்சியார், மகாலட்சுமி, மதுரை கோட்ட பொறுப்பாளர் ராமசேகர், தொழில் வல்லுனர் பிரிவு மாவட்ட தலைவர் அழகுமலை பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us