ADDED : ஜன 28, 2025 05:56 AM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் அரசு மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடந்தது. ஒன்றிய தலைவர் ரஞ்சித் தலைமை வகித்தார்.
பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், தலைமை மருத்துவர் சதீஸ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா முன்னிலை வகித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பிரவீன்குமார் வரவேற்றார். திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் சான்றிதழ்களை வழங்கினார். முகாமில் மாவட்ட தலைவர் பாலாஜி, செயலாளர் முகேஷ் பங்கேற்றனர்.
