ADDED : மார் 10, 2026 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே கோசுகுறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னோடி இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு இலவச புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர்
சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தார். திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பங்கேற்று 564 மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

