ADDED : டிச 24, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம்-செட்டியார்குளத்தெருவை சேர்ந்தவர் பாலாஜி 34.திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி முருகேஸ்வரி 27. நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தாய் வீடான துவரங்குறிச்சி சென்றார்.
நேற்று காலை மீண்டும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.20 ஆயிரம் , வெள்ளி கொலுசு கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

