ADDED : ஆக 02, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்ப்பால் வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் முகாம் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் சரவணன் துவங்கி வைத்தார். அங்கன்வாடி பணியாளர்கள், அமைதி அறக்கட்டளை நிறுவனர்கள் மற்றும் நிர்வாகிககள் கலந்து கொண்டனர்.

