நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: சுக்காம்பட்டி எஸ். குரும்பபட்டியில் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், பழுதான இரு மின் கம்பங்களை மாற்றிட வேண்டும், என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை பூசாரிபட்டி வந்த அரசு டவுன் பஸ்சை காலி குடங்களுடன் அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமதுரை எஸ்.ஐ., முத்துச்சாமி பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

