ADDED : நவ 22, 2025 03:25 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: பாகாநத்தம் புதுாரில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் நடக்கும் நிலையில் மின்மோட்டார் பழுதால் ஒரு வாரத்திற்கு மேலாக வினியோகம் பாதித்தது. இதனால் மக்கள் விவசாய தோட்டங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து பயன்படுத்தினர்.
அதிருப்தியில் இருந்த அப்பகுதியினர் காலி குடங்களுடன் பாகாநத்தம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மலைப்பட்டி திண்டுக்கல் அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
