sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இயற்கைக்கு மாறாக விளையும் மாங்காய்களை கண்காணிக்கலாமே

/

இயற்கைக்கு மாறாக விளையும் மாங்காய்களை கண்காணிக்கலாமே

இயற்கைக்கு மாறாக விளையும் மாங்காய்களை கண்காணிக்கலாமே

இயற்கைக்கு மாறாக விளையும் மாங்காய்களை கண்காணிக்கலாமே

1


ADDED : ஏப் 25, 2025 06:52 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 06:52 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, செந்துறை, அய்யலுார், பழநி, ஆத்துார் சுற்று கிராமங்களின் மக்களின் பிரதான தொழிலாக இருப்பது மா விவசாயம். இப்பகுதி விவசாயிகளில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மா விவசாயமே செய்கின்றனர்.

மா மரங்கள் குன்றுகள் , மலைகளில் நட்டு வளர்ப்பது எளிதாக இருப்பதோடு மானாவாரி முறையில் வளர்க்கப்படுகிறது. இதனால் நத்தம் வட்டத்தில் மட்டும் மா 7080 எக்டேர், சாணார்பட்டி வட்டத்தில் 5004 எக்டேரில் விவசாயம் நடக்கிறது. இங்கு காசா, கல்லாமை, செந்துரம், பங்கன பள்ளி, அல்போன்சா, பென்னட் அல்போன்சா, டங்கன், மரகதம், தங்ககட்டி, இமான் பசந்த், மல்கோவா, நீலம், ரூபி என 25க்கு மேற்பட்ட வகை மாங்காய்கள் விளை விக்கப்படுகிறது.மா மரங்கள் ஆண்டுக்கு இருமுறை பலன் தருகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் மா விவசாயிகள் பூச்சி தாக்குதல் இல்லாமல் இருக்க ஒன்று அல்லது இரண்டு முறை பூச்சி மருந்து தெளிப்பது வழக்கம். சிலர் பூச்சி மருந்துகளை தெளிக்காமல் இயற்கை விவசாயம் மட்டுமே செய்து வந்தனர். ஆனால் தற்போது மா விவசாயிகள் குறைந்தது 10 முதல் 15 முறை பூ பூப்பதற்கு, பிஞ்சுகள் பிடிப்பதற்கு, பிஞ்சுகள் உதிராமல் இருக்க, மரத்தில் தேன் வடியாமல் இருக்க, செல் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க என அதிகப்படியாக பூச்சி மருந்துகளை தெளித்து வருகின்றனர். மேலும் இயற்கைக்கு மாறாக குறிப்பிட்ட ரசாயன மருந்துகளை பயன்படுத்தி விளைச்சல் செய்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தவறினால் மரம் பட்டுப்போய்விடும் நிலை உள்ளது.

இயற்கைக்கு மாறாக ஆண்டு முழுவதும் மாங்காய் அறுவடை செய்யும்நோக்கில் இந்த முறையை பின்பற்றுவதால் எதிர்காலத்தில் மாமரங்களின் நிலை கேள்விகுறியாகும். ரசாயன மருந்துகளால் மட்டுமே வளரும் இந்த மாங்காய்களை உட்கொள்வதால் மனிதர்களுக்கும் பாதிப்பு வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள், ஆய்வாளர்கள் ஆய்வு செய்து விவசாய முறையை பின்பற்ற மா விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இதன் மீது மாவட்ட நிர்வாகமும் முனைப்பு காட்ட வேண்டும்.






      Dinamalar
      Follow us