ADDED : செப் 08, 2025 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: காச்சிக்குடா - மதுரை ரயிலில் கிடந்த கஞ்சாவை ரயில்வே போலீசார் கைப்பற்றினர்.
கர்நாடகா மாநிலம், காச்சிக்குடா - மதுரை இடையே வாராந்திர அதிவிரைவு ரயில் நேற்று திண்டுக்கல் வந்த போது, அந்த ரயிலில் ஏறி, போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, பொதுப்பெட்டியில், 2.8 கிலோ கஞ்சா, 8 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான குட்கா இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளிடமும், குட்காவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் ஒப்படைத்தனர். கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.