ADDED : ஏப் 14, 2025 05:43 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:' திண்டுக்கல் பழைய கரூர் ரோடு வி.எம்., நகர் ரயில்வே பாலம் அருகே அதே பகுதியைச் சேர்ந்த லதா 40, கண்மணி 32, செல்விநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் 21 ஆகியோர் 550 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தனர்.
தாலுகா எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
