ADDED : ஜூலை 07, 2025 02:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி லட்சுமிபுரத்தில் பலத்த காற்று வீசியதால் வேப்பமரம் விழுந்து கார் சேதமடைந்தது.
பழநி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று லட்சுமிபுரம் மகாலட்சுமி கோயில் அருகே உள்ள வீட்டின் முன் இருந்த வேப்பமரம் காற்றில்சரிந்தது.
அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் முன்பக்க கண்ணாடி மற்றும் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. தீயணைப்புத் துறையினர் மரத்தை அகற்றி சரி செய்தனர்.