ADDED : நவ 09, 2025 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி: பொள்ளாச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் முருகானந்தம் 32. மனைவி உச்சிமாகாளி 28, 4 வயது குழந்தை தவிறாக வர்த்தினி ஆகியோருடன் தேனி மாவட்டம் சின்னமனுாருக்கு காரில் சென்றார்.
காரை அவரே ஓட்டி வந்தார். செம்பட்டியை அடுத்த வீரசிக்கம்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்து இரும்பு மின் கம்பத்தில் மோதியது. கணவன், மனைவி, குழந்தை காயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.
ஒயர்கள் அறுந்து விழுந்ததால் மின் வினியோகம் துண்டிக்க பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. செம்பட்டி போலீசார் விசாரிக் கின்றனர்.

