sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உஷார் ...: மழைக்காலம் துவங்குவதால் டெங்கு,ஆஸ்துமாக்கு வாய்ப்பு

/

உஷார் ...: மழைக்காலம் துவங்குவதால் டெங்கு,ஆஸ்துமாக்கு வாய்ப்பு

உஷார் ...: மழைக்காலம் துவங்குவதால் டெங்கு,ஆஸ்துமாக்கு வாய்ப்பு

உஷார் ...: மழைக்காலம் துவங்குவதால் டெங்கு,ஆஸ்துமாக்கு வாய்ப்பு

1


ADDED : ஜூலை 11, 2025 03:20 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 03:20 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடைக்காலம் முடிந்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் வாட்டிவருகிறது. கண்மாய், குளம், ஏரிகளில் இயல்பைக்காட்டிலும் தண்ணீர் அளவு குறைந்துவிட்டது.

நகர்ப்புறங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாகவும், கிராமப்புறங்களுக்கு நன்னீர் ஊற்றுகள் உறைத்திட்ட கிணறுகள் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

நீர்நிலைகளில் குறைந்துவிட்ட தண்ணீர் அளவு காரணமாக குடிநீர் வினியோகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி நகர்புறங்களில் 4 நாட்களுக்கு ஒருமுறை , கிராமப்புறங்களில் வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு வினியோகிக்கப்படும் தண்ணீரும் கூட குறைந்த நேரமே வருவதால் வீடுகளில் குடங்கள், டிரம்கள், தொட்டிகள் என கிடைக்கும் பெரிய பாத்திரங்களில் தண்ணீரைப்பிடித்து பொதுமக்கள் தேக்கி வைக்கின்றனர்.

ஏற்கெனவே நகராட்சி, ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால் கிடைக்கும் நீரை கொதிக்கவைத்து பருகுவது அவசியம்.

ஆனால் தண்ணீர் பயன்பாடு அதிகம் தேவைப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்படும் நீரை கொதிக்க வைக்காமல் பருகுவதால் பல்வேறு நோய் தொற்றுக்கு மக்கள் ஆளாகின்றனர்.

பலநாள் கணக்கில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் தேக்கப்படும் நீரில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு குஞ்சுப்பொரிக்கின்றன. இதுபோல் வீடுகளில் தொட்டிகள், குடங்களில் தேக்கப்படும் நீரும் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. சமீபக்காலமாக காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நன்னீர் கொசு உற்பத்தி மூலம் பரவும் நோய் தாக்க்கத்திலிருந்து மக்கள் உஷாராக இருக்கவேண்டியது அவசியம்.

பொதுவாக மழைக்காலம் துவங்கும்போது காய்ச்சல், ஆஸ்துமா பிரச்னைகள் அதிகம் வரும். தற்போது அதிகரித்துவரும் காய்ச்சல் பாதிப்பு டெங்கு காய்ச்சல், புளூயன்சா போன்ற அதிதீவிர தன்மைக்கு மாறாமல் இருப்பதற்கு விழிப்புணர்வு அவசியமாகிறது.






      Dinamalar
      Follow us