ADDED : ஜூன் 24, 2026 01:49 AM
திண்டுக்கல்: த.வெ.க., தேர்தல் வாக்குறுதியில் ஆசிரியர்கள் கோரிக்கையின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் அரசாணை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் நடந்தது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
ஜே.எஸ்.ஆர்.,தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் குன்வர் ஜோஸ்வாவளவன் பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜிகேசவன், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏங்கல்ஸ் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புனிதன் நன்றி தெரிவித்தார்.
