ADDED : டிச 11, 2025 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
பள்ளி முதல்வர் திலகம் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் துவக்கி வைத்தார். கிறிஸ்து பிறப்பு குறித்த சொரூபங்களை கொண்டு குடில், கிறிஸ்துமஸ் மரம், தேவதைகள், சீடர்கள் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தினர். சீடர்கள் குழந்தை ஏசு பிறப்பிடத்தை அடைதல் பற்றி விளக்கப்பட்டு இருந்தது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.அறக்கட்டளை அறங்காவலர்கள் ஆல்பிரட்யங், அபிஷேக் முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியை வெண்ணிலா வரவேற்றார்.

