ADDED : ஜன 01, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் :  உத்திரபிரதேசம், சண்டிகார் போன்ற மாநிலங்களில் மின்வாரியம் தனியார்மாக்கல் நடவடிக்கையை கண்டித்து திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகில் சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் திருமலைச்சாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட நிர்வாகிகள் தவக்குமார்,பாண்டியன், பால்ராஜ், வெங்கிடுசாமி,பாலச்சந்திரபோஸ், தனசாமி, பாலசுப்ரமணியம், சி.பி.எம்., மாநகரச்செயலாளர் அரபுமுகமது பங்கேற்றனர்.

