ADDED : ஜன 21, 2026 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: ஆத்துமேடு அய்யனார் நகர் கொத்துவா பள்ளிவாசல் அருகில் அனுமதி இன்றி சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சேவல் சண்டை நடத்துபவர்களை சுற்றி வளைத்தனர்.
சேவல்களை தூக்கிக் கொண்டு ஓடியநிலையில், அய்யனார் நகர் ராஜ்குமார் 35, கதிர்வேல் 26, ஆத்தூர் முகமது ரஷீத் 34, என மூன்று பேரை கைது செய்தனர். 6 டூவீலர்கள், 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

