/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
3 குருத்துகளுடன் தென்னங்கன்று
/
3 குருத்துகளுடன் தென்னங்கன்று
ADDED : பிப் 04, 2026 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை சிங்காரக்கோட்டை எஸ். பாறைப்பட்டி விவசாயி சித்திரவேல் 55, தனது தோட்டத்தில் தென்னங்கன்றுகளை உருவாக்க 500 தேங்காய்களை மண்ணில் நடவு செய்து நீர் பாய்ச்சி பராமரித்தார். கன்றுகள் துளிர்விட்டு வளர்ந்த நிலையில் நேற்று கன்றுகளை தோண்டி எடுத்தபோது ஒரு தேங்காயில் 3 குருத்துகள் முளைத்திருந்தது.
பொதுவாக ஒரு தேங்காயில் ஒரு குருத்து மட்டுமே உருவாகும் நிலையில், 3 குருத்துகள் இருப்பதை அறிந்த ஊர் மக்கள் பார்த்துச் சென்றனர். மேலும் இதற்கு சித்திரவேல் குடும்பத்தினர் பூஜை செய்து வழிபட்டனர்.

