நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: சத்திரப்பட்டி காந்தி சேவா சங்க நிறுவனர் மா.வன்னிக்காளையின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வீரலப்பட்டியில் நடந்தது.
பழநி சந்தானபாரதி பக்தி பாடல்களை பாடினார். சன்மார்க்க சங்க தலைவர் சிவராம் தலைமை வகித்தார். கோவில்பட்டி பாலமுருகன் வரவேற்றார். கீரனுார் சன்மார்க்க குருகுலம் செயலாளர் திருப்பதி வன்னிக்காளை உருவப்படத்தை திறந்து வைத்தார்.
எம்.பி., சச்சிதானந்தம், காந்திகிராமம் ஊழியரகம் சத்யா ஜெகநாதன், தமிழ்நாடு சர்வோதய மதுரை மண்டல் தலைவர் சுந்தரராஜன், கிறிஸ்தவ ஐக்கிய மருத்துவமனை டாக்டர் குருவில்லா, பஷீர் அகமது, கோவை சாந்தி ஆசிரமத் தலைவர் கெஜிவினுஅறம், உதவி பேராசிரியர் சத்தியபாலன் பேசினர்.
சீனிவாசன் பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

