நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நாகல் நகரில் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்தனர். ஆணையர் செந்தில் முருகன் வரவேற்றார்.
திண்டுக்கல் மாநகராட்சி, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200 கர்ப்பிணிகளுக்கு வளையல்கள், சேலை, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, மண்டல தலைவர்கள் ஜான்பீட்டர், பிலால் உசேன், ஆனந்த், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

