sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ஆக்கிரமிப்பில் நடைபாதை அவதிப்படும் பயணிகள்

/

 ஆக்கிரமிப்பில் நடைபாதை அவதிப்படும் பயணிகள்

 ஆக்கிரமிப்பில் நடைபாதை அவதிப்படும் பயணிகள்

 ஆக்கிரமிப்பில் நடைபாதை அவதிப்படும் பயணிகள்


ADDED : பிப் 22, 2026 07:13 AM

Google News

ADDED : பிப் 22, 2026 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட்டிற்குள் நடைபாதைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து உள்ளதால் பயணிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

இந்நகராட்சி பஸ்டாண்ட்டிற்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். பஸ் ஸ்டாண்டின் கிழக்குப் பகுதியில் டவுன் பஸ்களும், மேற்குப் பகுதியில் வெளியூர் செல்லும் பஸ்களும் நிறுத்தப்படுகின்றன.

கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கு பகுதிக்கு செல்லும் நடைபாதையை சிறு வியாபாரிகள் ஆக்கிரமித்து உள்ளனர்.

மேலும் பஸ் ஸ்டாண்டில் ஒதுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் சில அடிகள் அதிகரித்து கடைகளை விரிவாக்கம் செய்து விடுகின்றனர்.

இதனால் வேகமாகச் சென்று பஸ்சில் ஏறும் நிலையில் உள்ள பயணிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவது தொடர்கிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் சிரமம் இன்றி நடந்து செல்வதற்கு நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us