ADDED : ஜன 29, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் 60. இவருக்கும் படுகைக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த வீரன் 50, என்பவருக்கும் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்தது. மீண்டும் தகராறு ஏற்பட வீரன் தரப்பினர் செல்வம் ,அவரது மனைவி லட்சுமி,மகள் சமய லட்சுமியை தாக்கினர்.
6 பேர் மீது வழக்கு பதிவு செய்த சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் வீரன், வீரன், சங்கிலி, கட்டாரி ஆகிய மூவரை கைது செய்தனர்.

