ADDED : ஏப் 17, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல் மீது வழக்கு பதிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து ,அய்யலுாரில் அக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடந்தது.
வட்டார தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். நகரத் தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், துணைத் தலைவர்கள் கார்த்திகேயன், எஸ்.பி.எம்.காந்தி, குஜிலியம்பாறை வட்டார தலைவர் கோபால்சாமி, அய்யலுார் முன்னாள் பேரூராட்சி தலைவர் முத்து பங்கேற்றனர்.