ADDED : ஜூன் 20, 2025 03:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மக்கள் பணத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசு, எல்.ஐ.சி., நிர்வாகத்தை கண்டித்து பழநி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகம் முன்பு திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்.,குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் காஜா மைதீன், நிக்கோலஸ், முகமது அலி, பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி கலந்து கொண்டனர்.