ADDED : பிப் 23, 2024 06:09 AM

அ நிறம் | அளவு
*வடமதுரை : தென்னம்பட்டியில் சாலை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று முன்தினம் தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் ஆதி காளியம்மன் கும்பாபிஷேக குழு நிர்வாகி பிரசன்ன வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் நடத்தினர். சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.
