ADDED : ஜன 25, 2026 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் - நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு, உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது. கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லுாரி மாணவர் களுக்கு பரிசு , பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, வழங்கல் அலுவலர் அன்பழகன், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் கார்த்திகேயன், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிற்றரசு கலந்து கொண்டனர். வருவாய் ஆய்வாளர் மோகனா நன்றி கூறினார்.

