ADDED : பிப் 07, 2026 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் காந்திகிராம பல்கலை சார்பில் மதுரையை சேர்ந்த ரியாக்ட் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். பொறுப்பு பதிவாளர் சுந்தரமாரி, அமைப்பின் நிறுவனர் ரமேஷ் துறை கண்ணன் கையெழுத்திட்டனர்.
ஆராய்ச்சி மேம்பாட்டு இயக்குனர் மீனாட்சி, ஹெப்சன் ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் தவராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

