/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் தொடர் சாரல் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
/
'கொடை'யில் தொடர் சாரல் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
'கொடை'யில் தொடர் சாரல் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
'கொடை'யில் தொடர் சாரல் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : ஜன 12, 2026 05:12 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
நேற்று முன்தினம் இரவு முதல் அடர் பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை நேற்று மாலை வரை பெய்து கொண்டே இருந்தது. இதையடுத்து பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.
பனி மூட்டத்தால் எதிரே வரும் வாகனம் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்த நிலையில், கடுங்குளிர் நிலவியது. குளிரை சமாளிக்க பருத்தியிலான ஆடைகளை அணிந்து பொது மக்கள், பயணிகள் நடமாடினர்.
வழக்கத்திற்கு மாறாக சாரல் மழையுடன் கருங்குளிருடன், பனியும் அதிகரித்ததால் 'கொடை'யில் வசிக்கும் மக்கள், சுற்றுலா வந்த பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. வாகனங்களின் செல்பவர்கள் முகப்பு விளக்கு எரியவிட்டுச் சென்றனர்.

