ADDED : செப் 12, 2026 06:04 PM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி, செப்.13-
காந்திகிராம பல்கலையின் 39வது பட்டமளிப்பு விழா விரைவில் நடக்க உள்ளதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்கலை செய்திக்குறிப்பு:
2025 -– 26 கல்வி ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு விரைவில் பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது. பட்டப்படிப்பு நிறைவு செய்த மாணவர்கள் இதில் பங்கேற்க தங்கள் விண்ணப்பங்களை செப்.,30க்குள் பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.ruraluniv.ac.in மூலம் சமர்ப்பிக்க வேண்டும். பட்டமளிப்பு விழா நடக்கும் நாள், இடம் குறித்த தகவல்கள் பல்கலை சார்பில் பின்னர் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
