ADDED : டிச 15, 2025 05:52 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் குவிந்தனர்.
கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் கார், வின்சிலும், மலைமீது பொது மற்றும் கட்டண தரிசன வரிசையிலும் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தரிசனம் செய்ய 3 மணி நேரம் ஆனாது. பஸ் வசதி இல்லாததால் பஸ் ஸ்டாண்ட்டில் பயணிகள் வெகு நேரம் காத்திருந்தனர்.
