ADDED : மார் 12, 2026 06:17 AM
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அ.கலையம்புத்துாரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பாலசுப்பிரமணி 36. இவர் கோபாலபுரத்தில் தங்கி தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். பா.ஜ.,வில் மேற்கு ஒன்றிய இளைஞரணி தலைவராக உள்ளார்.
பாலசுப்பிரமணி நேற்று இரவு, அ.கலையம்புத்துார் வீட்டிற்கு வாடகை வாங்க வந்தபோது இவரிடம் தகராறு செய்த ஒருவர் கத்தியால் வெட்டினார்.
இதுகுறித்து பாலசுப்பிரமணி தெரிவித்ததாவது:
பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட ஆண்டிபட்டியைச் சேர்ந்த எல்லச்சாமி, எனது வீட்டில் அருகே வந்து சமூக வலைதளத்தில் தைரியமாக பதிவிட்ட நீ, நேரில் பேசு எனக் கூறி தகராறு ஈடுபட்டு வைத்திருந்த கத்தியால் கழுத்தை வெட்ட வந்தார்.
தடுத்தபோது கையில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது.
உறவினர் என்னை அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர் என்றார்.

