நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி : அஞ்சுகுழிபட்டி ஊராட்சி துணைத்தலைவர் ரேணுகாதேவி  கணவர்  விவசாயி  சதீஷ்குமார் 42.
மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த மணிமாறனிடம்  வட்டிக்கு  ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.   இரு மாதமாக  வட்டி பணம் கொடுக்கவில்லை. இதனால் மணிமாறன்  சதீஷ்குமார் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.  ஆத்திரமடைந்த மணிமாறன்  அரிவாளால் சதீஷ்குமாரின்  தலையில் வெட்டினார்.இது போல்   மணிமாறன் நண்பர்கள் நந்தகுமார், மணிகண்டன் இருவரும் சதீஷ்குமாரை தாக்கினர்.  சாணார்பட்டி போலீசார்  விசாரிக்கின்றனர்.

