sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சேதமான அங்கன்வாடி; மர்ம நபர்களால் அச்சம் தவிப்பில் பழநி 4 வது வார்டு மக்கள்

/

சேதமான அங்கன்வாடி; மர்ம நபர்களால் அச்சம் தவிப்பில் பழநி 4 வது வார்டு மக்கள்

சேதமான அங்கன்வாடி; மர்ம நபர்களால் அச்சம் தவிப்பில் பழநி 4 வது வார்டு மக்கள்

சேதமான அங்கன்வாடி; மர்ம நபர்களால் அச்சம் தவிப்பில் பழநி 4 வது வார்டு மக்கள்


ADDED : ஆக 29, 2025 03:29 AM

Google News

ADDED : ஆக 29, 2025 03:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: சேதமடைந்த அங்கன்வாடி மையம், மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம், போக்குவரத்து நெரிசலால் சிரமம் என பழநி நகராட்சி 4 வது வார்டு மக்கள் சிக்கலில் தவிக்கின்றனர்.

குபேர பட்டினம், நேருஜி தெரு, பழனிசாமி வீதி, தண்டபாணி வீதி, கேப்டன் சுப்பிரமணி வீதி, ஏ.சி.சி., ரோடு, கண்ணகி ரோடு, ஓம் சண்முகா நகர், விநாயகா மில் ரோடு பகுதிகளை கொண்ட இந்த வார்டில் தினமும் போதை வஸ்துகளை பயன்படுத்தும் மர்ம ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தோடு உள்ளனர். இங்குள்ள அங்கன்வாடி மையம் சேதமடைந்துள்ளது. இதை விரைவில் சரி செய்து தர கோரிக்கை வலுத்து வருகிறது.

தெருநாய்கள் தொல்லை சின்னத்துரை, மளிகை கடை உரிமையாளர், பழனிச் சாமி தெரு: தெரு நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. குழந்தைகள், முதியவர்கள் நடந்து வர சிரமம் அடைகின்றனர். புது தாராபுரம் ரோட்டில் ரயில்வே கேட் அடைக்கப்படும்போது நெடுநேரம் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. வார்டு பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டமும் உள்ளது. போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும்.

அங்கான்வாடியை சரி செய்யுங்க மீனாட்சி, குடும்பத் தலைவி, பழனிச்சாமி தெரு: அங்கன்வாடி மையத்தை சரி செய்வதோடு அங்கன்வாடி மையத்திற்கு அருகே உள்ள பயன்பாடு இல்லாத கிணற்றை மூட வேண்டும். இதோடு வார்டில் சமுதாயக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மர்ம நபர்கள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள் மாலை நேரங்களில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இங்கு கண்காணிப்பு கேமராவும் அவசியமாகிறது .

நடவடிக்கை எடுக்கப்படும் கலையரசி, கவுன்சிலர், (தி.மு.க.,) : புதிய ரேஷன் கடை விரைவில் திறக்கப்பட உள்ளது.

தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். புது தாராபுரம் சாலையில் மேம்பால பணிகளுக்கு பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.

போதை ஆசாமிகளை கட்டுப்படுத்த போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us