sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சேதமடைந்த ரோடு, காட்டுமாடுகளால் அச்சம்

/

சேதமடைந்த ரோடு, காட்டுமாடுகளால் அச்சம்

சேதமடைந்த ரோடு, காட்டுமாடுகளால் அச்சம்

சேதமடைந்த ரோடு, காட்டுமாடுகளால் அச்சம்


ADDED : அக் 10, 2025 03:25 AM

Google News

ADDED : அக் 10, 2025 03:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கொடை' 23 வது வார்டில் தொடரும் அவலம்

கொடைக்கானல்: -சீனிவாசபுரம், ஏஐடியுசி நகர் பகுதிகளை கொண்ட கொடைக்கானல் நகராட்சி 23 வது வார்டில் சரிவர எரியாத தெருவிளக்குகளால் இரவில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. சேதமடைந்த கான்கிரீட் ரோடால் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். துார்வாராத சாக்கடை, காட்டுமாடு ,தெரு நாய்களின் அச்சுறுத்தலால் குடியிருப்புவாசிகள் அவதி என ஏராளமான பிரச்னைகள் உள்ளன.

ஜெய்கணேஷ் ,அ.தி.மு.க., பாசறை செயலாளர் : வார்டில் கழிப்பறை வசதியின்றி அவதியுறும் நிலை உள்ளது. சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு குறுக்கே உள்ள ரோடு படிக்கட்டு இன்றி பொதுமக்கள் ,பள்ளி சிறார்கள் தடுமாறுகின்றனர். ரோட்டோரம் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் முழுமை பெறாமல் விபத்து அபாயத்தில் உள்ளது. தற்போது அமைக்கப்பட்ட கான்கிரீட் ரோடுகள் சேதமடைந்துள்ளது. வார்டில் சமுதாயக்கூடம் இல்லாமல் உள்ளது.

தெருவிளக்குகள் எரிவதில்லை கோபி, வியாபாரி: சீனிவாசபுரம் மாரியம்மன் கோயில் பகுதியில் சிமென்ட் ரோடு சேதமடைந்துள்ளது. பஸ்ஸ்டாப் சேதமடைந்து சுகாதாரக்கேடாக உள்ளது. வாய்க்கால்கள் துார்வாராமல் கழிவு நீர் ரோட்டில் செல்கிறது. புதிய வாய்க்கால் கட்ட வேண்டும். தாழ்வான பகுதியில் மழைநீர் செல்லும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் குடியிருப்பில் புகும் அபாயம் உள்ளது. காட்டுமாடு,தெருநாய்களால் குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை.

தேவை கண்காணிப்பு கேமரா சதிஷ்குமார், பா.ஜ., முன்னாள் நகரத் தலைவர் : முத்துமாரியம்மன் கோயில் தெருவில் மழைநீர் செல்லும் வழிகள் அடைப்பட்டுள்ளது. குப்பை சரிவர அள்ளுவதில்லை. குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு செல்ல முடியாதப்படி இடிபாடுகள் குவிந்துள்ளன. ரோட்டில் நிறுத்தும் வாகனங்களால் அவசர காலத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. தெருக்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. மின்ஒயர்கள் தாழ்வாகவும் சீரற்ற நிலையில் உள்ளது. தெருக்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும் மரியபுஷ்பம், கவுன்சிலர் (தி.மு.க.,) : ரூ. இரண்டரை கால் கோடியில் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சுகாதார வளாகத்தை அகற்றி சமுதாயக் கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி மூலமும், காட்டு மாடுகளை கட்டுபடுத்த வனத்துறை மூலம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மழை நீர் அடைப்புகள் சரி செய்யப்படும். வாய்க்கால்கள் துார்வாரி புதிய வாய்க்கால் கட்டமைக்கப்படும்.வார்டில் சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us