ADDED : மார் 11, 2026 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: நாகம்பட்டி சேனன்கோட்டை காவிரி நீரேற்று நிலையம் அருகே தடுப்பணை உள்ளது. இங்கு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது 5 அடி நீள சாரைப்பாம்பை 6 அடி நீள மற்றொரு பாம்பு துரத்தி வந்தது.
இதை பார்த்த பணியாளர்கள் கூச்சலிட்டவாறு ஓடினர். இதன் பின் இரு பாம்புகளும் பின்னி பிணைந்தப்படி நடனமாடின. வேடசந்துார் தீயணைப்பு வீரர்கள் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

