ADDED : ஏப் 26, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் திருச்சிமாவட்டம் வையம்பட்டி கருங்குளத்தை சேர்ந்த அற்புதராஜ் 36, அகஸ்டின் பிரபு 26, ராபர்ட் 32, ஜான் கென்னடி 29, சின்னப்பன் 34, ஜெயக்குமார் 32, ஆகிய 6 பேர் காரில் கேரளா சென்று விட்டு பிப்.16 ல் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
வேடசந்துார் அருகே வந்த போது லாரி மீது கார் மோதியதில் சின்னப்பன், அகஸ்டின் பிரபு, ராபர்ட் இறந்தனர். காயமடைந்த ஜான்கென்னடி நேற்று இறந்தார். இதைத்தொடர்ந்து இவ்விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி விசாரிக்கிறார்.

