/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் நடந்த ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு: ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு
/
பழநி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் நடந்த ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு: ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு
பழநி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் நடந்த ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு: ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு
பழநி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் நடந்த ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு: ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 16, 2025 11:49 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பழநி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அங்கமான இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு நடத்தப்பட்டதற்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
திண்டுக்கல்மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பின் ஒன்றிய மாநாடு நடந்தது.
இதில் எம்.பி., சச்சிதானந்தம் கலந்து கொண்டார். பாதயாத்திரை மண்டபங்கள் பக்தர்கள் , நன்கொடையாளர்களின் பணத்தில் அறநிலையத்துறையால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அதில் அரசியல் கட்சி நிகழ்ச்சியை நடத்தியது தவறு என கூறிய ஹிந்து அமைப்புகள் அனுமதி தந்த சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியறுத்தி உள்ளன.
நீதிமன்றத்தை நாடுவோம்
ஹிந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமரவிக்குமார் கூறியதாவது:
பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லும் போது ஓய்வு எடுத்து செல்ல அவர்களின் காணிக்கை பணத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் 'மதம்' என்றால் 'அபின்' என்ற கொள்கை உடைய கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் கிளை அமைப்பான வாலிபர் சங்க கூட்டம் நடத்த எந்த அடிப்படையில் அறநிலைத்துறை, பழநி கோயில் தேவஸ்தானம் அனுமதி வழங்கியது. இதேபோல், பிற கட்சிகள் கூட்டம் நடத்திட அனுமதி வழங்குமா. பழநி கோயில் இணை ஆணையர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறாரா,ஆளும் அரசின் கூட்டணி கட்சியினரின் அழுத்தத்திற்கு அடிபணிகிறாரா என்பது தெரியவில்லை.
பிரதமருக்கு எதிராக கூட்டங்கள் நடத்திட அனுமதித்த அறநிலையத்துறை பழநி கோயில் நிர்வாக அதிகாரி, அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் இதற்கு உரிய விளக்கம் தர வேண்டும்.அனுமதி கேட்கப்பட்டதா, அனுமதி கொடுத்தது யார். ஆம் எனில் அந்த அனுமதி கடிதத்தை வெளியிட வேண்டும்.இல்லையெனில் சட்டவிரோதமாக அனுமதி அளித்த அதிகாரிகள் மீது அறநிலையத்துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடி உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து தக்க நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துவோம் என்றார்.
நடவடிக்கை எடுங்க
வி.ெஹச்.பி., ,திருகோயில், திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
பக்தர்கள் ,நன்கொடையாளர்களின் பணத்தில் கட்டப்பட்ட மண்டபத்தில் அரசியல் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி அளித்தது தவறு. இதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் அரசுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய கட்சிகள் பக்தர்கள் ஓய்வு எடுக்க எடுக்கும் மண்டபங்களை பயன்படுத்துவது கண்டணத்திற்குரியது என்றார்.
விசாரிக்கிறேன்
ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தது தொடர்பாக பழநி கோயில் நிர்வாகத்திடம் கேட்க தொடர்பு கொண்டபோது இணை ஆணையர் உட்பட எவரும் அழைப்பை எடுக்கவில்லை. இதை தொடர்ந்து திண்டுக்கல் கலெக்டர் சரவணனிடம் கேட்டபோது ''கூட்டம் நடந்த இடம் அறநிலையத்துறை சார்ந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து விசாரிக்கிறேன்'' என்றார்.