நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இறந்த அஜீத்குமார் மரணத்திற்கு காரணமான போலீசார், துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக அனைத்திந்திய இளைஞர், மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வினோத்குமார், துணை செயலாளர் குமரேசன், தாலுகா துணை தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். விஜயமுத்துக்குமார், சஞ்சய், சாரதி, கருப்புச்சாமி கலந்து கொண்டனர்.