
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மகாத்மா காந்தி பெயரில் 100 வேலை திட்டம் தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் தலைமைத் தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியச் செயலாளர் அம்மையப்பன் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., லாசர் பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி, ஒன்றிய நிர்வாகிகள் பழனிச்சாமி, செல்வநாயகம், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளர் சரத்குமார், வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ரஞ்சித், பிரேம்குமார், மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றியச்செயலாளர் ஸ்டாலின் பங்கேற்றனர்.

