UPDATED : மே 15, 2026 07:27 PM
ADDED : மே 15, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
பழநி:மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பாதுகாக்க விக்சித் பாரத் ஜிராம்ஜி திட்டத்தை கைவிட கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பழநியில்ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் அருள் செல்வன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டனர். இதேபோல் தொப்பம்பட்டி பஸ்ஸ்டாண்ட் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
