sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

/

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : அக் 13, 2024 07:29 AM

Google News

ADDED : அக் 13, 2024 07:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாடிக்கொம்பு,: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே மகாலட்சுமி அம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ரெட்டியார்சத்திரம் பண்ணைப்பட்டி பழனிக்கவுண்டன்புதுார் குட்டிக்கரட்டில் குரும்பக்கவுண்டர் ராயர் குல இனமக்களுக்கு பாத்தியப்பட்ட மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா நடக்கிறது.

இந்தாண்டுக்கான திருவிழா அக்., 10 ல் கரூர் அரவக்குறிச்சி அமராவதி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

இதையடுத்து நேற்று மதியம் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதம் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் முன்பு பக்தர்கள் ஈர உடையுடன் வரிசையாக அமர பூஜாரி அழகர்சாமிக்கு அருள் வந்து பக்தர்களின் தலையில் தேங்காய்களை உடைத்தார்.

தொடர்ந்து பெண் பக்தர்கள் ஆரோக்கியமாக வாழ பூஜாரியிடம் சாட்டை அடி பெற்றுக் கொண்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us