ADDED : மார் 16, 2026 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: வார விடுமுறையை முன்னிட்டு நேற்று பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
வெளி மாநில, வெளி மாவட்ட பக்தர்கள் கோயிலுக்கு செல்ல ரோப்காரில் பல மணி நேரம் காத்திருந்தனர். பொது, கட்டண தரிசன வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர்.
கைக்குழந்தைகளுக்கு பால், பக்தர்களுக்கு நாள் முழுதும் அன்னதானம், பிரசாதம் வழங்கப் பட்டது.

