/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் பழநி கோயில் செல்லும் பாதை மாற்றம்
/
தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் பழநி கோயில் செல்லும் பாதை மாற்றம்
தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் பழநி கோயில் செல்லும் பாதை மாற்றம்
தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் பழநி கோயில் செல்லும் பாதை மாற்றம்
ADDED : ஜன 21, 2026 07:02 AM

பழநி: தைப்பூசத்திருவிழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் செல்லும் பக்தர்கள் வசதிக்கேற்ப பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழநி தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பிப்., 1 தைப்பூசத்தன்று பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்ற வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி வளாகத்தில் வெளியூர் பஸ்கள் நிறுத்தம், தனியார் வாகனங்கள் நிறுத்த கட்டணமில்லாத 13 பார்க்கிங் ஏரியாக்கள், உள்ளூர் டவுன் பஸ்கள் வந்து செல்ல தற்போது பயன்படுத்தி வரும் பஸ் ஸ்டாண்ட் ஆகியவை செயல்பட உள்ளன.
நகருக்குள் வந்து செல்லும் வாகனங்களுக்கு பாஸ் வசதி இந்த ஆண்டு வழங்கப்படவில்லை.
ஆனால் அதற்கான பாதை மாற்றம் செய்யப்பட உள்ளது.
பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வரிசை கிரிவீதி ரோப் கார் நிலையம் அருகில் இருந்து குடமுழுக்கு மண்டபம் வரை அமைக்கப்பட உள்ளது.
பக்தர்கள் அய்யம்புள்ளி ரோடு, சன்னதி வீதி, ஆண்டவர் பூங்கா ரோடு, கொடைக்கானல் ரோடு இணைப்பு சாலை மூலம் கிரிவீதியை அடைந்து வரிசையில் இணைந்து கொள்ளலாம்.
இதேபோல் பக்தர்கள் கோயில் இருந்து கீழே இறங்கியவுடன் பாதவிநாயகர் கோயிலில் இருந்து அய்யம்புள்ளி ரோடு, சன்னதி ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்லலாம்.

