/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குழுப்பண்பு கற்றுத்தரும் திண்டுக்கல் அச்யுதா பள்ளி
/
குழுப்பண்பு கற்றுத்தரும் திண்டுக்கல் அச்யுதா பள்ளி
குழுப்பண்பு கற்றுத்தரும் திண்டுக்கல் அச்யுதா பள்ளி
குழுப்பண்பு கற்றுத்தரும் திண்டுக்கல் அச்யுதா பள்ளி
ADDED : அக் 01, 2025 07:55 AM

திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.இ.,) 2012 முதல் திண்டுக்கல்லில் செயல்பட்டு வருகிறது. பிரிகேஜி முதல் பிளஸ் 2 வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடந்து வருகிறது.மாணவர்களுக்கு தலைமைப்பண்பு, நல்லொழுக்கம், தேசப்பற்றை வலியுறுத்தும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்டுகிறது.
கலை திட்டத்தின்படி கராத்தே, சிலம்பம், கல்வியறிவு மட்டுமின்றி கூடுதலாக மேற்கத்திய நடனம், பரதநாட்டியம், ஸ்கேட்டிங், சதுரங்கம்,தோட்டக்கலை, டிரம்ஸ், சமையல், வில்வித்தை, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் தரப்படுகிறது. மாதந்தோறும் 3ம் வெள்ளிக்கிழமை கலர் டே நடத்தப்படுகிறது.
இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மாதந்தோறும் நடைபெறும் அனைத்து வகையான விழாக்கள் மாணவர்களை கொண்டே நடத்துகிறோம். இதன்மூலம் அவர்களுக்கு குழுப்பண்பு கற்றுத்தரப்படுகிறது.10, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்கள் பெற ஆசிரியர்கள் வழிகாட்டுகின்றனர்.
ஐ.ஐ.டி., நீட் தேர்விற்கான சிறப்பு பயிற்சிகள் தரப்படுகிறது. இதன் மூலம் தேர்வு பெற்ற மாணவர்கள் தமிழகம் மட்டுமில்லாது பல்வேறு மாநிலங்களில் பொறியியல், மருத்துவக்கல்லுாரியில் பயில்கின்றனர்.
-- எம்.பி. மங்களராம் காயத்ரி மங்களராம் செயலாளர்கள், அச்யுதா பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.இ.,) திண்டுக்கல்.