/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 16, 2025 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: உலக வெண்கோல் தினத்தை முன்னிட்ட பார்வை மாற்றுத்திறனாளிகளை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் சேர்த்து அனைத்து சலுகைகளையும் அரசு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட செயலாளர் பகத்சிங் துவக்கிவைத்தார். பொருளாளர் கருப்புசாமி, துணை செயலாளர் கன்னிசாமி, ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் கலந்துகொண்டனர்.