ADDED : பிப் 01, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : தேசிய பேரிடர் மீட்பு குழு எஸ்.ஐ., அனுஜ்யாதவ் தலைமையில் பழநி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரிடர் காலங்களில் மாணவிகள் தற்காத்துக் கொள்வதில் , தன்னுடன் இருப்பவர்களை காப்பது குறித்து விளக்க பயிற்சி அளித்தனர்.
ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் பழனிச்சாமி, தலைமை ஆசிரியை அருள்ஜோதி, உதவி தலைமை ஆசிரியை வானதி, ஆசிரியர் ரவிச்சந்திரன், ஆசிரியை சோபனகுமாரி, மணிமேகலை கலந்து கொண்டனர்.