/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாளை முதல்வர் வருகை ட்ரோன்கள் பறக்க தடை
/
நாளை முதல்வர் வருகை ட்ரோன்கள் பறக்க தடை
ADDED : ஜன 06, 2026 06:03 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு வான்வெளியில் ட்ரோன் உட்பட பிற ஆளில்லா வாகனங்களை பறக்க விட்டால், அந்நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் '' என கலெக்டர் சரவணன் எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கை: திண்டுக்கல்லில் நாளை (ஜன.7) நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் ட்ரோன்கள், ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப் பட்டுள்ளது.
தடையை மீறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

