/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கல்விசார் விழிப்புணர்வு பயணம்
/
கல்விசார் விழிப்புணர்வு பயணம்
ADDED : ஜன 09, 2026 06:07 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றத்துறை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 50 அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், பத்து ஆசிரியர்கள் இணைந்து 2 நாட்கள் கல்விசார் கள பயணம் செல்லும் வாகனத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.
மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பைக்கு குட்பை என்ற வாசகங்கள் அடங்கிய மஞ்சள் நிற பை வழங்கினார். இவர்கள் கொடைக்கானல் பேரிஜம் ஏரி, வானியல் ஆராய்ச்சி மையம், பைன் காடுகள், பிரையண்ட் பூங்காவில் நடக்கும் விழிப்புணர்வு முகாம்களில் பங்கேற்க உள்ளனர்.
உதவி வன அலுவலர் நிர்மலா, மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கல்வி) சரவணக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன், லேகாவர்ஷினி பங்கேற்றனர்.

